Sunday, January 17, 2016

விதியைப் பற்றி வீண் தர்க்கம் செய்யாதீர்

 يوم يُسْحَبُونَ في النَّارِ على وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

உடனே அவர்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படும் போது நரகின் வேதனையை சுவைத்துப் பாருங்கள்! (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் (அதற்கான) முன் திட்டப்படியே நாம் படைத்திருக்கிறோம் (அல்குர்ஆன் 54:48,49)


விளக்கம்: இந்த வசனம் விதியைப் பற்றி தர்க்கம் செய்ய வந்த இணை வைப்பவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது.  
 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ عن زِيَادِ بن إسماعيل الْمَخْزُومِيِّ عن مُحَمَّدِ بن عَبَّادِ بن جَعْفَرٍ عن أبي هُرَيْرَةَ قال جاء مُشْرِكُو قُرَيْشٍ يُخَاصِمُونَ النبي  في الْقَدَرِ فَنَزَلَتْ هذه الْآيَةُ  يوم يُسْحَبُونَ في النَّارِ على وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

குரைஷ் குல இணை வைப்பாளர்கள் நபி ஸல் அவர்களிடம் விதியைப் பற்றி தர்க்கம் செய்ய வந்தனர். உடனே அவர்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படும் போது நரகின் வேதனையை சுவைத்துப் பாருங்கள்! (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் (அதற்கான) முன் திட்டப்படியே நாம் படைத்திருக்கிறோம் (அல்குர்ஆன் 54:48,49) என்ற வசனம் இறங்கியது.

(குறிப்பு: இந்த ஹதீஸ் இப்னுமாஜா 83, முஸ்லிம் 2656 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
http://islamiyadawa.com
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!